10-ம் தேதி முதல் போலீசார் விடுப்பு எடுக்க தடை

0
41

சென்னை: அயோத்தி நிலம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவரவுள்ளதையடுத்து வரும் 10-ம் தேதி முதல் காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக காவல்துறை டி.ஜி.பி. அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்துதல் மற்றும் அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் 13-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து மாநில சட்டம்,ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு வரும் 10-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு அளிக்க கூடாது என காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here