
சென்னை: கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், திருப்பத்தூர். நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவு:
பிரவீன் நாயர்- ஊரக வளர்சசி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர்
சுதன்- மாநில திட்டங்கள் துறை இயக்குநர்
அண்ணாதுரை- வேளாண்துறை இயக்குநர்
சண்முகசுந்தரம்- கூட்டுறவுத்துறை பதிவாளர்
சிவன் அருள் – பத்திரப்பதிவுத்துறை ஐஜி
நாகராஜன்- – நில நிர்வாக ஆணையர்
பொன்னையா- நகராட்சி நிர்வாக இயக்குநர்
சந்தீப் நந்தூரி – சுற்றுலாத்துறை இயக்குநர், சுற்றுலாத்துறை வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் பதவி வகிப்பார்
லட்சுமி பிரியா- தொழில்நுட்ப கல்வி இயக்குநர்
செல்வராஜ்- பேரூராட்சிகள் ஆணையர்
லதா- ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்
பிருந்தா தேவி- பட்டுவளர்ப்புத்துறை இயக்குநர்
வள்ளலார்- விவசாய மார்க்கெட்டிங் மற்றும் விவசாய வணிக கமிஷனர்
சரவண வேல்ராஜ்- நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குநர்
டி.ஜி.வினய்- சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநராக
ஜெயகாந்தன்- சுங்கத்துறை கமிஷனர்
ரத்னா- சமூக நலத்துறை இயக்குநர்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர்- அமுதவள்ளி
கந்தசாமி – பால் உற்பத்தித்துறை இயக்கநர் . இவர் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மேலாண் இயக்குநராகவும் இருப்பார்.
பாஸ்கர பாண்டியன்- மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சிலின் உறுப்பினர் செயலர்.
மேலும், விடுமுறையில் சென்ற அன்சுல் மிஸ்ரா சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.