தமிழகத்தில் தொழில் முனையோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் “மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவர் மாதிரி “திட்டம் செயல் படுத்த உள்ளது. மீனவர்கள்,மீன்வளர்ப்போர், சுயஉதவி குழுக்கள் / கூட்டு பொறுப்பு குழுக்கள் / மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள் / தனி நபர் தொழில் முனைவோர் / தனியார் நிறுவனங்கள் இதித்ததில் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ1.25 கோடி ) மற்றும் ஆதி திராவிடர் / பழங்குடியினர் / மகளிருக்கு 30 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ1.50 கோடி )வழங்கப்படும் .இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அரியலூர் மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் .இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31-07-2021 ஆகும் .மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி., இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.